பெங்களூரு: கர்நாடகாவில் 17 தொகுதிகளில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங் கியது. இரண்டு தொகுதிகள் வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை
அடுத்த மாதம் 5ஆம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.
அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தங்களது பதவியிலிருந்து விலகினர்.
இதனால் பதவி விலகிய 17 எம்எல்ஏக்களும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து, அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதனால் முதல்வர் பதவியி லிருந்து குமாரசாமி விலகினார்.
இதையடுத்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.