தொடக்க ஆட்டக்காரர்கள் பற்றி விமர்சிக்க வேண்டாம்: கோஹ்லி

புனே: தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி கேட்டுக்கொண்டுள்ளார்,

புனேயில் நடைபெற்ற 20 ஓவர் ஆட்டத்தில் இலங்கை அணியை எளிதாக வீழ்த்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், “இந்த ஆண்டின் தொடக்கம் எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. சரியான பாதையில் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறோம். ஓர் ஆட்டத்தில் இலக்கை விரட்டிப்பிடித்தோம். மற்றோர் ஆட்டத்தில் முதலில் பந்தடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். இரு ஆட்டங்களிலும் அணியின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

“அணியின் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் (ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான்) வலுவான வீரர்கள். அணியின் வெற்றிக்காக அவர்கள் நன்றாக ஆடுவது நல்ல விஷயம். மூவரும் இருப்பதன் மூலம் தொடக்க வரிசைக்கு யாரை பயன்படுத்துவது என்ற வாய்ப்பு கிடைக்கிறது. அவர்தான் சிறந்தவர், இவர்தான் நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் தொடக்க ஆட்டக்காரர்களை ஒப்பிட்டுப் பேசுவதை ரசிகர்களும் விமர்சகர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். மற்றபடி அணியில் உள்ளவர்களுக்கு எதிராக பேசப்படும் கருத்துகளை நான் ஆதரிக்க மாட்டேன். இது நல்ல அறிகுறியும் அல்ல,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!