வடஇந்திய மாநிலங்களில் கடுங்குளிருடன் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்றுக் காலை 8 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவானது. கடுமையான பனிமூட்டம் நிலவுவதன் காரணமாக ரயில் தண்டவாளங்களில் உள்ள சமிக்ஞை விளக்குகள் தெளிவாகத் தெரியவில்லை. இதன் காரணமாக டெல்லியில் மட்டும் நேற்று 15 விரைவு ரயில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கடும் பனிமூட்டமும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவும் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. (படத்தில்) ஸ்ரீநகரில் தால் ஏரியின் கரையோரத்தில் பனியால் மூடப்பட்டுள்ள நடைப்பாலத்தில் செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி
கடுங்குளிராலும் பனிமூட்டத்தாலும் தவிக்கும் வடமாநிலங்கள்
14 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2020 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!