ஜார்ஜ்டவுன்: அண்மைக்காலமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஒரு கருத்து தமிழக அரசியலை மையம் கொண்டிருக்கும் வேளை யில் அது தொடர்பாக பினாங்கு மாநில துணை முதல்வர் ராம சாமி பிபிசி செய்தியாளரிடம் பேசி இருக்கிறார். பெரியாரை விமர்சித்துப் பேசியதற்காக ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெரியார் குறித்துப் பேசிவிட்ட தால் அவரைக் குற்றவாளி என சொல்வதற்கில்லை என்றும் திரு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
“அதேசமயம் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ரஜினி புரிந்து, தெரிந்துகொண்டு செயல்பட்டால் நன்றாக இருக் கும். மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதே பெரியாரின் முதன்மை விருப்ப மாக இருந்தது,” என்றார் அவர்.