கப்பல் பயணிகளில் 355 பேருக்கு தொற்று

ஜப்பான் கடலோரமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் உல்லாசக் கப்பலில் கொரோனா கிருமி தொற்றி யவர்களின் எண்ணிக்கை 355க்கு உயர்ந்துவிட்டது என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் நேற்று அறிவித்தார். படம்: இபிஏ-இஎஃப்இ

ஜப்பான் கடலோரமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் உல்லாசக் கப்பலில் கொரோனா கிருமி தொற்றி யவர்களின் எண்ணிக்கை 355க்கு உயர்ந்துவிட்டது என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் நேற்று அறிவித்தார்.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் ஹாங்காங்கும் தங்கள் மக்களை அந்தக் கப்பலில் இருந்து மீட்டு வருவதற்காக விமானங்கள் அனுப்ப உள்ளன. கப்பலில் மொத்தம் 1,219 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 355 பேருக்கு கொரோனா கிருமி அறிகுறி தெரியவந்ததாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சர் கட்ஸ்சுனோபு கட்டோ நேற்று கூறினார்.

டைமண்ட் பிரின்சஸ் என்ற அக்கப்பல் 3,700 பேருக்கும் அதிக பயணிகளுடன் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஜப்பான் கடலோரப் பகுதிக்குச் சென்றது. கொரோனா தொற்று காரணமாக அது தனித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே, அந்தக் கப்பலில் இருக்கும் தன்னுடைய மக்களை மீட்கப்போவதாக ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்தது. அதேபோல கனடாவும் ஹாங்காங்கும் தாங்கள் விமானங்களை அனுப்பி தங்கள் பயணிகளை மீட்கப்போவதாக தெரிவித்து உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!