காக்கா முட்டை’களுடன் இணைந்த நயன்தாரா

கடந்த 2014ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்து பாராட்டு மழையில் நனைந்த 'காக்கா முட்டை' படத்தில் நடித்த சிறுவர்களுடன் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார். சேரி பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளைக் கதையாகக் கொண்டு 'காக்கா முட்டை'யை இயக்கியிருந்தார் மணிகண்டன்.இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

இப்படத்தில் நடித்த சிறுவர் களான விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் பாராட்டுகள் பல கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து இந்தச் சிறுவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தை மீஞ்சூர் கோபி என்பவர் இயக்கி வருகிறார். இவர்தான் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்று அந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையைக் கொடுத்தவர். தற்போது 'காக்கா முட்டை' சிறுவர்களை வைத்து இயக்கி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இந்தப் படத்தில் நயன்தாரா ஆட்சியர் வேடத்தில் நடிக்கி றாராம். தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் முதல்கட்ட படப் பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இதில் நயன்தாரா தொடர்பான காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்துவிட்டதாகக் கூறப்படு கிறது. இப்படத்தில் சுனு லட்சுமி, ராமச்சந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லால்குடி இளையராஜா அரங்கு அமைக்கும் பணிகளைச் செய்துவருகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியை மேற்கொண்டு வருகி றார்.

படத்தில் பாடல்களே கிடையாதாம். இருப்பினும், பின் னணி இசைக்காக முன்னணி இசையமைப்பாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாகக் கூறப்படு கிறது.
இதற்கிடையே, அதிகமாக சர்ச்சையில் சிக்கிய கோலிவுட் நடிகை என்றால் அது நயன் தாராதான் என்று பரவலாகக் கூறப்படுகிறது.
டிப்பில் சக்கைப் போடு போடும் இந்த அழகு நடிகை சில விஷயங்களில் விட்டுக்கொடுக் காதவராம். தெலுங்குத் திரையுலகில் வெங்கடே‌ஷுடன் 'பாபுபங்காரம்' படத்தில் நடிக்கும்போது, நயன் தாராவின் கால்‌ஷீட் நாட்களை படக்குழுவினர் விரயம் செய்துவிட்டனராம்.

இறுதியில் ஒரு பாடல் மட்டும் எஞ்சி இருக்க அந்தப் பாடல் படப்பிடிப்புக்காக நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் நயன் செல்ல மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.அதனால் அப்பாடலின்றி படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற இந்தப் படத்துக்கான இசைவெளி யீடு, டிரெய்லர் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்துகொள்ள வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!