திருவாரூர்: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் போது 261 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று முன்தினம் திருவாரூர் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இங்குள்ள தேவாகண்ட நல்லூர் கடைவீதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு வகையிலும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் நடத்தினர். எனினும் விடிவுகாலம் பிறக்கவில்லை. மாவட்ட நிர்வாகமோ காவல்துறையினரோ மதுக்கடையை அகற்றுவ தற்கான நடவடிக்கைகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை தேவாகண்டநல்லூர் கிராம மக்கள், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கடைவீதியில் உள்ள மதுபான கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டக் குழுவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் காளியப்பன் உள்ளிட்ட கிராம மக்கள் 261 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்: 261 பேர் கைது
2 Aug 2016 10:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Aug 2016 10:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!