இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி ஒருவருக்கு மட்டுமே கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரைச் சேர்த்து 383 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது.
இன்றைய எண்ணிக்கையைச் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் இதுவரை 32,343 பேருக்குக் கிருமித் தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறைந்த எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் கிருமித் தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் 23 பேர் கிருமித் தொற்றால் மரணமடைந்துள்ளனர். கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் ஒன்பது பேர் வேறு காரணங்களால் மாண்டனர்.