சிங்கப்பூரில் நேற்று நண்பகல் 12.00 மணி நேர நிலவரப்படி உள் ளூரில் ஸிக்கா கிருமி பரவியதில் மேலும் 38 புதிய சம்பவங்கள் ஏற் பட்டுள்ளன என்று நேற்று வெளி யிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு உறுதி செய்தது. இந் நிலையில் ஸிக்கா கிருமி பர வலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
அதே சமயத்தில் வீட்டு உரிமை யாளர்கள் கொசு பெருக்கத்தைத் தடுக்க உதவும் ஐந்து கட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று வரை 189 பேர் ஸிக்கா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஸிக்கா சம்பவங்களைக் கையாள்வதில் சிங்கப்பூர் முன்மாதிரியாக விளங் குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.