பாட்டாளிக் கட்சி வேட்பாளர் ரயீசா கானுக்கு எதிரான போலிஸ் புகார்களையும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அவர் பதிவு செய்திருந்த கருத்துகள் தொடர்பான சர்சைகளையும் பண்பற்ற அரசியல் என சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் சாடியுள்ளார்.
நாட்டின் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்று 26 வயது ரயீசா கான் பதிவேற்றம் செய்த இரண்டு பதிவுகள் தொடர்பான போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயீசா கானுக்கு எதிராக போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, முறையற்ற, மனதைப் புண்படுத்தக்கூடிய கருத்துகளை சமூக ஊடகத்தில் பதிவேற்றவம் செய்ததற்கு செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியில் இடம்பெறும் ரயீசா கான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அந்தப் பதிவுகளை ரயீசா கான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றம் செய்ததாகவும் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடும் சமயமாகப் பார்த்து யாரோ அவருக்கு எதிராக போலிசில் புகார் செய்திருப்பதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online