கொழும்பு: உலகம் முழுவதும் கொரோனா கிருமித்தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும் என்றும் நள்ளிரவுக்குள் முடிவு தெரிந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஒரு கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க இருந்த இந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
இலங்கையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம் குறைந்துவிட்டாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை வாக்காளர்கள் கடைப்பிடிக்க வும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.