பெய்ஜிங்: ஹாங்காங்கின் ஊடகத் துறை பெரும் புள்ளியான ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டதை சீனாவில் இணையப் புழங்கிகள் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கைதான ஜிம்மி லாய் சீனப் பெருநிலத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறினர்.
ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஜூன் மாதம் சீனா நடப்புக்கு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்கீழ் ஜிம்மி லாய் கைதாகி இருக்கிறார். வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை ஜிம்மி லாய் கீழறுத்து இருப்பதாகக் கூறி அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.