சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக வளாகத்தை சுற்றி வரும் எல்லா துணை பேருந்துகளில் இனி 'வைஃபய்' இணையச் சேவையை மாணவர்களும் பணியாளர்களும் பயன்படுத்தலாம் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. வாகனங்களுக்கு இடையே நிலவும் கம்பியில்லா இணைய இணைப்பு (mesh platform) எனும் புதிய இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் முதல் முறையாக இந்தச் சேவை அறிமுகம் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் சேவை மூலமாக வளாகத்தை இயக்கும் முறை, சேவைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் எந்த இடத்தில் பேருந்து நிற்கிறது, எத்தனை பேர் பேருந்தில் ஏறுகிறார்கள் போன்ற தகவல் களை உடனுக்குடன் அளிக்க முடியும். இதனால் தேவைகேற்ப பேருந்துகளை வரிசைப்படுத்தி அனுப்ப இது ஏதுவாக இருக்கும். ஸ்டார்ஹப், கம்ஃபர்ட் டெல்குரோ பேருந்து, 'வினாம்' ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தச் சேவை அறிமுகம் கண்டிருக்கிறது.
‘என்யுஎஸ்’ வளாகத்தில் செல்லும் துணை பேருந்துகளில் இணைய வசதி
23 Sep 2016 09:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2016 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!