கான்பூர்: இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 215 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 318 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சைத் தொடங்கியது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக் கையைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டனர். ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளும் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளும் சாய்த்து நியூசிலாந்தைத் திணறவைத்தனர்.
இந்திய அணியின் அபாரப் பந்துவீச்சால் நியூசிலாந்தால் அதன் முதல் இன்னிங்சில் 262 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. லோகேஷ் ராகுல் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் 64 ஓட்டங்களுடனும் புஜாரா 50 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஓர் விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இந்தியா தனது அதிரடி பந்தடிப்பைத் தொடர்ந்தால் முதல் டெஸ்ட் போட்டியைக் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.
நியூசிலாந்தின் விக்கெட் சாய்ந்ததை அடுத்து கொண்டாட்டத்தில் இறங்கும் இந்தியாவின் ஜடேஜா (இடது), கோஹ்லி. படம்: ராய்ட்டர்ஸ்