சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் மூத்த தலைவர்கள் சம்பள வெட்டுக்கு ஒப்புதல்
சிங்கப்பூரின் ஆறு தன்னாட்சி பல்கலைக்கழகங்களின் மூத்த நிர்வாகத் தலைவர்கள், கொவிட்-19 நிலவரம் ஏற்படுத்தியுள்ள பொருளியல் பாதிப்பு காரணமாக சம்பள வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அந்த ஆறு கல்வி நிலையங்கள், கடந்த சில மாதங்களாக இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் நிதி உதவித் திட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இதன் தொடர்பில் கருத்துரைத்த கல்வி அமைச்சின் பேச்சாளர், “ஆறு தன்னாட்சி பல்கலைக்கழகங்களும் தலைமைத்துவ பொறுப்புகளில் உள்ள தங்கள் மூத்த தலை வர்களின் சம்பளத்தைக் குறைக்க, கல்வி அமைச்சின் ஆலோசனையைக் கேட்டு முடிவெடுத்துள்ளன,” என்று தெரிவித்தார்.
சம்பள வெட்டு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அமைச்சும் பல்கலைக்கழகங்களும் தெரிவிக்கவில்லை.
“அரசாங்க நிதி உதவி பெற்றுவரும் தேசிய கல்வி நிலையங்களான ஆறு தன்னாட்சி பல்கலைக்கழகங்களுப் சிங்கப்பூரர்களுக்குக் கல்வி அளிக்கும் தேசிய பணியை ஆற்றுகின்றன. இந்த சிரமமான காலகட்டத்தில் தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் நாட்டின் ஒற்றுமை உணர்வுக்குத் தோள் கொடுக்கின்றன,” என்றும் கல்வி அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
முதலாளிகள் தங்கள் செலவுகளைக் குறைத்து, ஊழியர் களின் வேலைகளைக் காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என்ற தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரையின்படி, பல்கலைக்கழகங்கள் இந்த சம்பள வெட்டு நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.