போலி அருட்போதகர், சமயப் போதகர்கள் பற்றி சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சபையின் அண்மைய சஞ்சிகையில் பேராயர் அலுவலகம் எழுதிய கட்டுரை ஒன்றில் இரு பெண்கள் தெய்வீகச் செய்திகளைப் பெற்றதாகக் கூறுகின்றனர் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த திருவாட்டி மேரி கார்பெர்ரி (மரியா டிவைன் மெர்சி) என்பவரும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த திருவாட்டி ஃபேபியென் குரெரோ ஆகிய இருவரும் சுயமாகத் தங்களை போதகர்கள் என அறிவித்துக்கொண்டதாக அச்செய்தி குறிப்பிட்டது.
பல ஆண்டுகளாக இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கன்னி மேரியிடமிருந்தும் திருவாட்டி கார்பெர்ரி தெய்வீகத் தகவல் களைப் பெறுவதாகவும் சிங்கப்பூரில் வசிக்கும் ஒருவர் உள்பட உலகின் பல பகுதிகளிலும் இருந்து தம்மைப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்தியில் சொல்லப்பட்டு இருந்தது.