தோக்கியோ: ஜப்பானின் தென் பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசுவதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சூறாவளி காரணமாக ஜப்பானின் இரு பெரிய விமான நிறுவனங்களான ஆல் நிப்பன் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை அவற்றின் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று நேற்று காலை ஒகினாவா தீவின் தலைநகரைத் தாக்கத் தொடங்கியதாக ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது.
பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் நேற்று ஒகினாவா தீவில் உள்ள நஹா விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விமான நிலையம் இன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீவில் உள்ள தொடக்கப் பள்ளிக் கூடங்களும் உயர்நிலைப் பள்ளிகளும் மூடப் பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின. சூறாவளிக் காற்று வடகிழக்கு நோக்கி வீசுவதால் ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவை இப்புயல் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியின்போது கடல் அலைகளின் சீற்றம் அதி கரிக்கலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.