மயிலாடுதுறை அருகே உள்ள விளநகரில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சுரங்கப்பாதை (படம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விளநகரில் உள்ள துறைகாட்டும் வள்ளலார் கோவிலில் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக பத்தடி ஆழத்தில் குழி தோண்டியபோது கோவிலின் உள்பிரகார சுவரை ஒட்டியவாறு பழமை வாய்ந்த நான்கடி சுவர் ஒன்று இருப்பது தெரியவந்தது.
அதன் உள்ளே சென்றபோது சுமார் 10 அடி தூரத்துக்கு ரகசிய சுரங்கப்பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.