ரியாத்: சனாவில் உள்ள சமூகக்கூடம் ஒன்றில் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது அங்கு ஆகாயத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 140க்கும் அதிகமானோர் பலி யானதை அடுத்து ஏமனில் போராளிகளுக்கு ஏதிராகப் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணி, அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் குறித்த விசாரணை மேற்கொள்ளத் தயா ராக இருப்பதாக அறிவித்துள்ளது. "சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஷியா போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளிலேயே ஆக மோசமானது," என்று இந்தத் தாக்குதலை ஈரானின் ஆதரவு பெற்ற ஹுதி போராளிகள் அமைப்பு குறிப்பிட்டதுடன் அதற்காக அராபியக் கூட்டணியைச் சாடியுள்ளது. தக்குதலில் பொது மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவுடன் கூட்டணி யாகச் செயல்படுவது குறித்து மறு ஆய்வு செய்ய அமெ-ரிக்கா உடனடி நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. இந்தத் தாக்குதலில் 525க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக ஐநா குறிப்பிட்டது.
தாக்குதல் நடத்தப்பட்ட நேரம், இடம், சுற்றுப்புறம் ஆகியன குறித்த விவரங்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவும் தயாராக இருப்பதாக கூட்டணி தெரிவித்துள்ளது. சனாவில் உள்ள சமூகக் கூடம் ஒன்றில் கூடி துக்கம் அனுசரித்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலின் தீவிரத்தையும் ஏற்பட்ட சேதத்தையும் கண்டு உதவிப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக ஏமனுக்கான ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜமீ மெக்கோல்ட்ரிக் கூறினார். பொதுமக்களின் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட வேண் டும் என்றும் அவர் சொன்னார். விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ஆதரவு அளிப்பது பற்றி மறுஆய்வு செய்யப்படும் என ஐநா தெரி வித்துள்ளது.