கடந்த 2011ஆம் ஆண்டில் கொண்டாடிய தலைத்தீபாவளிக்குப் பிறகு, முதன்முறையாக இவ்வாண்டுதான் சிங்கப்பூரில் தீபாவளியைக் கொண்டாடினர் திரு ராஜ்குமார் சொக்கலிங்கம் குடும்பத்தினர் (படம்).
“வழக்கமாக தீபாவளிக்கு மூன்று நாள்களுக்குமுன் குடும்பத்துடன் மலாக்கா சென்றுவிடுவோம்.
ஆயினும், இம்முறை தேக்கா சென்று பொருள்கள் வாங்கியது மகிழ்ச்சியான தீபாவளி உணர்வை அளித்தது. மலேசியாவிற்குச் செல்ல முடியாத வருத்தத்தை அது ஈடுகட்டியது.
எப்போதும் சிங்கப்பூரில்தான் தீபாவளிக்கான பொருள்களை வாங்குவோம். தேவையான பொருள்கள் அனைத்தும் வசதியாகவும் தரமாகவும் இங்கு கிடைக்கின்றன.
இம்முறை பொருள்களின் வகைகள் சற்று குறைவாக இருந்தபோதிலும் இப்போதைய கொவிட்-19 சூழலில் அவ்வளவு இருந்ததே மனநிறைவு அளித்தது,” என்றார் 37 வயது திரு ராஜ். படம்: ராஜ்குமார் சொக்கலிங்கம்