தூத்துக்குடி: பத்தாம் வகுப்பு மாணவியை தண்ணீர் தொட்டிக்குள் வைத்து கொலை செய்ய மர்ம நபர்கள் மேற்கொண்ட முயற்சி கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். அந்த மாணவியின் தாய் கந்துவட்டி புகார் தொடர்பில் சாட்சியம் அளித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையைச் சேர்ந்தவர் பாக்கிய லட்சுமி. இவரது மகள் உமா உள்ளூர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பாக்கிய லட்சுமி செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களது அண்டை வீட்டில் வசிப்பவர் ஆனந்தி. இவர் தனது தேவைக்காக பார்த்தசாரதி என்பவரிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அண்மையில் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி போலிசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண் டனர். அப்போது ஆனந்திக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்துள் ளார் பாக்கியலட்சுமி. இதனால் அவர் மீது பார்த்தசாரதி தரப்பு கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் பாக்கியலட்சுமி வீட்டிற்குள் திடீரெனப் புகுந்தனர். அங்கு படுத்துக் கொண்டிருந்த அவரது மகள் உஷாவின் கை, கால்களைக் கட்டி தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் மாணவி உஷா காப்பாற்றப்பட்டார். கந்துவட்டி விவகாரம் தொடர் பாக இளம் மாணவியை கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவில் பட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்கள் காவல் நிலைய முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.