சொகுசு கப்பல் ஒன்றில் கொவிட்-19 தொற்றிய ஒருவர் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தக் கப்பல் சிங்கப்பூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. ராயல் கெரிபியன் நிறுவனத்தின் ‘குவாண்டம் அஃப் த சீஸ்’ என்ற அந்த சொகுசு கப்பலின் நான்கு நாள் பயணம் தடை செய்யப்பட்டதை அடுத்து அக்கப்பல் மூன்றாவது நாளான இன்றே (டிசம்பர் 9ஆம் தேதி) சிங்கப்பூர் திரும்ப வேண்டியிருந்தது.
சிங்கப்பூர் சுற்றுப்புற வாரித்தின் சொகுசுக்கப்பல் பயணத் திட்டத்தின்படி சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட இரண்டாவது கப்பலான இந்தக் கப்பல், கொரோனா கிருமி தொற்றியவருடன் தொடர்பில் இருந்த விருந்தினர்களையும் கப்பல் பணியாளர்களையும் தனிமைப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் கொவிட்-19 இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெந்திங் or ஜென்டிங் க்ரூஸ் லைன்ஸ் சிங்கப்பூரின் முதல் கிருமிப்பரவல் கால சொகுசு கப்பல் பயணத்தை நவம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. அந்தக் கப்பலில் 1,400 பயணிகள் இருந்தனர்.
சிங்கப்பூரைவிட்டு புறப்படும் அனைத்து கப்பல்களும் ‘க்ரூஸ்சேவ்’ (CruiseSafe) என்ற சான்றிதழைப் பெற்று அதன் பாதுகாப்பு, சுகாதார தரநிலைகளின்படி நடந்துகொள்ளவேண்டும்.