வில்சன் சைலஸ்
சிரமமான சூழலில் உள்ளவர் களுக்கு உடனடியாக உதவி செய்து அக்கறையுடன் அவர் களைப் பார்த்துக்கொள்வதில் மன திருப்தியடைகிறார் 52 வயது திரு ஒலி முகமது. 'எஸ்எம்ஆர்டி' ரயில் நிறுவனத் தின் பணியாளரான இவர், சுமூகமான பயணத்தை உறுதி செய்வதுடன் முன்பின் தெரியாத பயணிகளுக்கும் உற்ற தோழனாக திகழ்கிறார்.
தேசிய கனிவன்பு இயக்கம், தன்னலமற்ற இவரது சேவை யைப் பாராட்டி நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்கு வரத்து நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து 'தலைசிறந்த' விருதை வழங்கி திரு ஒலியை கடந்த புதன்கிழமை பாராட்டியது. எம்ஆர்டி நிலைய மேலாளராகப் பணியாற்றி வரும் திரு ஒலி, சில வாரங்களுக்கு முன் இயூ டீ எம்ஆர்டி நிலையத்தில் வழக்கமாக வேலை பார்த்து வந்தார். பிற்பகல் சுமார் 3 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் உடல் நலம் சரியின்றி காணப்படுவதுடன் அவருக்கு உதவித் தேவைப்படு வதாகவும் திரு ஒலிக்குத் தகவல் வந்தது.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வில்லியம் வான் (இடது), போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் இருவருடன் விருது பெற்ற திரு ஒலி முகம்மது (நடுவில்). படம்: சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்