கடந்த 13 ஆண்டுகளாக நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த நடிகை கவுதமி தற்போது அவரை விட்டுப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார். இது தன் வாழ்க்கையில் தாம் எடுத்த பேரழிவான முடிவு என்று குறிப் பிட்டுள்ள அவர், இருள் சூழ்ந்த வலி யான காலங்களில் தம்மை வழிநடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள் ளார். கமலும் கவுதமியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந் ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் கமலஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி அறிவித்துள்ளார்.
"நானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்கப்போவதில்லை என் பதைத் தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன். 13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதைக் கருதுகிறேன். "மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ் வொரு தனி நபருக்குள்ளும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன். "ஒரு குழந்தைக்குத் தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அக்கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்து, எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்குத் தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.
திரைத்துறை நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், கவுதமி.