மேற்கு ஆஸ்திரேலிய மாநில மாணவர்கள் விரைவில் தமிழ், இந்தி, கொரிய மொழிகளை அரசாங்கப் பள்ளிகளில் ஒரு பாடமாகக் கற்கலாம்.
வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் புதிய மொழிப் பாடத் திட்டம் அறிமுகமாகும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாலர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில கல்வி, பயிற்சிகளுக்கான அமைச்சர் சூ எலரி தெரிவித்துள்ளார்.
“மேற்கு ஆஸ்திரேலியாவில் அனைத்துலக அளவில் பலதரப் பட்ட கலாசாரம் உள்ளது.
“இந்தப் புதிய மொழிப் பாடங்கள் உள்ளூர் வட்டாரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரந்த தேர்வை வழங்குவதற்கான வாய்ப்பை பள்ளிகளுக்கு வழங்கும் என்று அமைச்சர் சூ கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 190க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்மொழிப் பாடத்திட்டம் மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.