சிங்கப்பூர் - இந்தோனீசிய தலைவர்களின் பொழுதுபோக்கு சந்திப்பில் கலந்துகொள்ள பிரதமர் லீ சியன் லூங் இன்று இந்தோனீசியாவின் செமராங் நகருக்குப் புறப்படுகிறார். இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் பிர தமர் லீ கலந்துகொள்ளும் முதலாவது தலைவர்கள் பொழுதுபோக்கு சந்திப்பு இது. இச்சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகளின் மேம்பாடு பற்றி ஆராய்வதுடன் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக் கவும் ஆழமாக்கவும் வழிகளை ஆராய இரு தலைவர்களும் முனைவார்கள்.
இந்த இரண்டு நாள் சந்திப்பில் இரு தலைவர்களின் முன்னிலை யில் மூன்று புரிந்துணர்வுக் குறிப்பு கள் கையெழுத்தாகும். மேலும் சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவன மும் இந்தோனீசிய நிறுவனம் ஒன் றும் இணைந்து உருவாக்கியுள்ள கெண்டால் தொழிற்பூங்காவை இரு தலைவர்களும் திறந்து வைப் பார்கள். பிரதமர் லீயுடன் அமைச்சர்கள் பலர் உடன் செல்கின்றனர்.