ப. பாலசுப்பிரமணியம்
ஒருவர் மலேசியாவில் வளர்ந்து வரும் எழுத்தாளர், மற்றொருவர் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மேடை நாடகங்களில் மூழ்கிவிட்ட கலைஞர். இவ்விரு வரும் சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்துகொள்ளும் தளமாக இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத் தாளர் விழா அமைந்தது. ஆண்டுதோறும் நடத்தப்படும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இவ்வாண்டு சிறப்பு வெளிநாட்டு பேச்சாளர்களாக மலேசியாவின் பூங்குழலி வீரனும் தமிழகத்தின் அ.மங்கையும் அழைக்கப்பட்டனர்.
எழுத்தாளர், நாடக அரங்க வியலாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர் என பல பரிமாணங்களை கொண்ட மங்கை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடிகர்கள், நடிப்பு குறித்த கலை களஞ்சியத்திற்கு பங்களித் திருப்பது குறிப்பிடத்தக்கது. மொழி சார்ந்த கல்வியின் ஆளுமையை வளர்ப்பதற்கு மேடை நாடகம் உறுதுணையாக இருக் கின்றது என்று கூறிய எழுத்தாளர் மங்கை, சிறார்களை இவற்றில் ஈடுபடுத்தும்போது அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கும் ஒரு வாக் கியத்தை பிறர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல் வதற்கும் அது உதவும் என்றார். விவரம் - அச்சுப் பிரதியில்
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்ட மலேசிய எழுத்தாளர் பூங்குழலி வீரன் (இடது), தமிழகத்தின் அ.மங்கை. படம்: திமத்தி டேவிட்