மூன்றாவது முறையாக கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணையும் புதிய படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெரிட்டுள்ளனர்.
கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனைத்தொடர்ந்து வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரு படங்களுக்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.