திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் ரூ.70 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, இப்போது ‘டெடி’, ‘எனிமி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களிலும் ‘புஷ்பா’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்யா மீது ஜெர்மன் பெண் புகார் அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஆர்யா, கொரோனா ஊரடங்கு நேரத்தில் தன் கையில் தற்போது படம் இல்லை என்றும் பணத்திற்காக சிரமப்படுவதாகவும் கூறினார்.
அத்துடன், தன்னை விரும்புவ தாகவும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார்.
“ஆர்யாவின் ஆசை வார்த்தை களை நம்பி நானும் அவரது பெய ருக்கு ரூ.70,40,000 பணத்தை அனுப்பி வைத்தேன்.
“ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், திருமணம் செய்துகொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை,” என்று குற்றஞ்சாட்டி உள்ளார் விட்ஜா.
இதுதொடர்பாக பிரதமர், அதிபர் அலுவலகங்களுக்கும் இணையம் வழி புகார் அளித்துள்ளார்.
அத்துடன், ஆர்யாவுக்கு பணம் அனுப்பிய பணப் பரிவர்த்தனை களுக்கான ஆதாரங்களையும் அவரது தாயார் தம்மை மோசமாக திட்டிய ஆதாரங்களையும் புகாருடன் விட்ஜா இணைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தப் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா, தமிழ்நாடு முதல் வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஐஏஎஸ்சுக்கு இந்தப் புகாரை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பில் சரி யான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக விட்ஜா கூறியுள்ளார்.
இவ்விஷயத்தில் பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் தமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ள விட்ஜா, தற்போது ஆர்யா மீது கொடுத்துள்ள புகாரை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லையேல் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் விட்ஜா குற்றம்சாட்டி உள்ளார்.
நடிகர் ஆர்யா எப்படி நாடகம் போட்டாலும் தனது புகாரை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என்றும் கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை என்றும் விட்ஜா கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் விட்ஜாவிடம் இருந்து ரூ.70 லட்சம் ரூபாய் பணத்தை வெஸ்டர்ன் யூனியன் மூலம் ஆர்யா தனது மேலாளர் முகமது ஹூசைனி என்பவரது வங்கிக் கணக்கில் பெற்றது உறுதியாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் புகார் குறித்து விளக்கம் பெற ஆர்யாவை தொடர்பு கொண்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.