பிரேடல் எம்ஆர்டி நிலையம் அருகே தோ பாயோ லோரோங் 1, புளோக் 107ல் அமைந்துள்ள 'தாய் லிலி' உணவகத்தில் டாக்சி ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானது. 61 வயதான டாக்சி ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று மாலை 5.19 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் வேறு யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை.
இரவு நேரத்திற்காக அப்போதுதான் அந்த உணவகம் திறக்கப்பட்டது என்றும் அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்றும் கூறப்பட்டது. விபத்துக்குள்ளான அந்த டாக்சி மாலை 6.50 மணியளவில் அங்கிருந்து இழுத்துச் செல்லப் பட்டது. அப்பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த இன்னொரு காரும் இந்த விபத்தில் சிக்கியதாக அறியப்படுகிறது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்