ஆசிய சமுதாயத்தில் பலரும் கேட்டறியாத, பார்த்தறியாத, அதிகம் பேசப்படாத, நிழல் போல் வாழும் சமூகங்கள் குறித்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் வாரந்தோறும் வெளியிட்டு வரும் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி இது. இந்தியாவில் கழிவுநீர்ப் பகுதி களையும் சாக்கடைகளையும் துப்புரவு செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு நேரும் அவமானம் குறித்து வேதனை வார்த்தைகளால் விவரிக்கின்றனர். கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்று அழைக்கப்படுவோரே பெரும்பாலும் ஈடுபடு கிறார்கள். அவர்களில் சிலர், சமூகம் எவ்வாறு, ஏன் தங்களைப் போன்றோரை ஒதுக்கி வைக்கிறது என்பதை இந்தியாவிலுள்ள செய்தியாளரிடம் விவரித்தனர்.
இந்தியாவின் பெங்களூரு நகரில் தமது ஈரறை வீட்டிலுள்ள படுக்கையில் கால் ேமல் கால் போட்டு ஓய்வெடுத்துக்ெகாண்டிருந்த
பெத்தண்ணா என்பவரின் கைபேசி நான்காவது தடவையாக ஒலித்தது.
“இன்னொருவரின் கழிவறை அடைத்துக்கொண்டுள்ளது,” என்று கூறிய பெத்தண்ணா, படுக்கையைவிட்டு கீழே இறங்கி, வேலை செய்யும்போது அணியும் காக்கிச் சட்டை, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்துெகாண்டார்.
அவர் தங்கியிருக்கும் தெரு
முனையைச் ெசன்றடைவதற்குள் அவரது கைபேசி மீண்டும் ஒலித்தது. கூப்பிட்டதும் அதே நபர்தான்.
“பெத்தண்ணா கிளம்பிவிட்டாரா, சீக்கிரம் வர முடியுமா, பேருந்துக்குக் காத்திராமல் ‘ஆட்ேடா ரிக்ஷா’ எடுத்து வரமுடியுமா,” என்று அவர் கேட்டார்.
“பணம் படைத்தவர்கள் தங்களது கழிவுநீர்த் தொட்டி தேங்கிக் கிடக்கும்பொழுதுதான் செய்வதறியாது தவிப்பார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு எனது தேவை மிகவும் அவசியம்,” என்று 55 வயது நிறைவடைந்த பெத்தண்ணா கூறுகிறார்.
கைபேசியில் அழைத்தவர் தம்மை ‘அண்ணா’ என அழைத்தபோதும் அது வெறும் வாய் வார்த்தைதான் என்பது 20 ஆண்டுகளாக கழி
வறைகள், சாக்கடைகள், பாதாள கழிவுநீர் போன்றவற்றை சுத்தம் செய்துவரும் பெத்தண்ணாவுக்குத் தெரியாததல்ல.
குழாய்களில் நல்ல நீர் வர ஆரம்பித்து, தமது வாடிக்கையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்ததும் அவர்களின் சாதி மனப்பான்மை அங்கு மேலோங்கி நிற்கும் என்கிறார் இவர்.
“அவர் எனக்கு நியாயமான கூலி கொடுத்தால் போதுமானது,” என்று கூறிய பெத்தண்ணா, ஆட்ேடா ரிக்ஷா ஒன்றை நிறுத்தும்படி கைகாட்டியதுடன் அந்தப் பயணச்செலவையும் வாடிக்கையாளரே கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார் நம்பிக்கையுடன்.
இதுபோன்ற வேலை ஒன்றுக்கு அவர் 1,000 ரூபாய் (சுமார் S$18.30) வரை கூலி கேட்பார்.
நிரந்தர வருமானம் எதுவும் இல்லாத இவரைப்போன்ற விருப்பத் தொழில் புரிவோருக்கு வருமானம் என்றுமே நிச்சயமில்லாத ஒன்றுதான்.