காலஞ்சென்ற நடிகை மனோராமா வின் இடத்தைப் பூர்த்தி செய்ய கோவை சரளாவால் மட்டுமே முடி யும் என்கிறார் சசிகுமார். இவரது நடிப்பில் உருவாகும் புதிய படம் 'பலே வெள்ளையத்தேவா'. பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா நாயகி யாக அறிமுகமாகி இருக்கிறார். மேலும், கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"குடும்ப உறவுகளை முழுநீள நகைச்சுவையுடன் சொல்லும் பட மாக 'பலே வெள்ளையத்தேவா' உருவாகியிருக்கிறது. இதில் எனக்கு அம்மாவாக ரோகிணி நடித் திருக்கிறார். 'செல்ஃபி' காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். "படத்தின் சுவரொட்டிகளைப் பார்க்கும்போது 'பாட்டி சொல்லை தட்டாதே' படம்போல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் கோவை சரளா எனக்கு பாட்டியும் கிடை யாது. நான் பேரனும் கிடையாது.
'பலே வெள்ளையத்தேவா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.