ஹாங்காங்: ஹாங்காங்கின் மோங்கோக் பகுதியின் கடை வீதியில் சட்டவிரோதமாகக் கடை நடத்தியவர்களை அகற்றும் முயற்சியில் போலிசார் நேற்று ஈடுபட்டபோது அங்கே கலவரம் வெடித்தது. சில்லறைப் பொருட்கள் விற்கும் தற்காலிகக் கடைகள் நடத்திய கடைக்காரர்களுக்கு ஆதரவாக ஆத்திரத்தில் அங்கே சேர்ந்த கூட்டத்தை விலக்க கலகத் தடுப்பு போலிசார் வான் நோக்கி இரண்டு முறை சுட்டனர்.
உலகப்புகழ் பெற்ற நாதன் ரோட்டில் நெருப்பு பற்றி எரிந்த குப்பைத் தொட்டிகள், செங்கற்கள், உடைந்த போத்தல்கள் இரைந்தன. அங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஒரு டாக்சியின் முன்புறக் கண்ணாடி வெடித்துச் சிதறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் செங் கற்களைத் தூக்கி போலிசார் மீது வீசினர். 2014ஆம் ஆண்டில் ஜன நாயகத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு நடந்த ஆக மோசமான தெருக் கலவரம் என்று தெரிவித்தப்பட்டது.
ஹாங்காங்கின் மோங்கோக் பகுதியில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நாதன் ரோட்டில் தெருவோரத் தற்காலிகக் கடைகளை அகற்றும் பணியில் போலிசார் ஈடுபட்டபோது ஆத்திரங்கொண்ட கும்பல் ஒன்று அங்கே கூடியது. அதனைச் சமாளிக்க கலவரத் தடுப்பு போலிசார் வான் நோக்கி இரண்டு முறை சுட்டனர். அப்போது வெடித்த கலவரத்தின்போது போலிசார் மிளகுப் பொடி தூவியும் தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விலக்கினர். படம்: ராய்ட்டர்ஸ்