ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதால் மனநலச் சோதனை நடத்த கோரிக்கை
ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் சக மாணவரை கொலை செய்ததாக 16 வயது சிறுவன் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. பதின்ம வயதுடையவர் என் பதால் அச்சிறுவனைப் பற்றிய அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. 6 பூன் லே அவென்யூவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடி கழிவறையில் திங்கட்கிழமை (ஜூலை 19) முற்
பகல் 11.16 மணிக்கும் 11.44 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உயர்நிலை 1 மாணவரான 13 வயது சிறுவனின் மரணத்திற்கு இச்சிறுவனே காரணம் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள உயர்நிலை 4 மாணவரான இச்சிறுவன், காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். நீதிபதி கேட்ட சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு 'ஆமாம்' என்று இவர் பதிலளித்தார்.
மனநலன் பற்றி சோதித்து அறி யும் பொருட்டு சிறுவனை சாங்கி மருத்துவ நிலையத்தில் காவலில் வைக்க காவல்துறை சார்பில் முன்னிலையான அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார். 2019ஆம் ஆண்டு சிறுவன் 14 வயதாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்றில் காவல்துறை தலையிட்டது.
அப்போது பாதுகாப்புக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், மனநல சுகாதாரக் கழகத்தில் அனு மதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியதாக அவ்வழக்கறிஞர் தெரிவித்தார். இச்சம்பவத்தின் அடிப்
படையில் மாணவனின் மனநலனை மதிப்பிடவேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் பீட்டர் கீத் ஃபெர் னாண்டோ, தற்கொலை முயற்சி சம்பவத்தை உறுதி செய்ததுடன் உயர்நிலை 2ல் சிறுவன் படித்துக்கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
தங்கள் மகனைப் பிரதிநிதித்து முன்னிலையாகுமாறு மாணவனின் பெற்றோர் திங்கட்கிழமை இரவு தம்மைக் கேட்டுக்கொண்டதாகவும் இருப்பினும் நீதிமன்றம் வரப்போவதில்லை என பெற்றோர் கூறியதாகவும் திரு பீட்டர் தெரிவித்தார்.
கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற போதிலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவே சட்டத்தில் இடமுண்டு. இதற்கிடையே, உயிரிழந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்த நேற்று ஏராளமானோர் முன்வந்தனர். பள்ளியின் வாசலில் பிற்பகல் நிலவரப்படி 60க்கும் மேற்பட்ட பூங்கொத்துகள் வைக்கப்பட்டு இருந்தன.