அண்மையில் நிகழ்ந்த சில சம்பவங்களால் சிங்கப்பூர் இனவாதமிக்க நாடாகிவிட்டது என்று
கருதிவிடக்கூடாது என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார். இருப்பினும், இன நல்லிணக்கத்தை உறுதி செய்யக் கடந்த பல ஆண்டுகளாக நடை
முறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள் முழுமையான தீர்வைத் தரும் என்று மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்பதை அண்மைய சம்பவங்கள் நினைவுப்படுத்துகின்றன.
பல்லின மக்களிடையிலான உறவை மேம்படுத்த தேவையான மாற்றங்களை அடிக்கடி செய்ய வேண்டும் என்றார் அவர்.
இன நல்லிணக்கத்தை மேம்
படுத்தும் தேசிய அமைப்பான OnePeople.sg ஏற்பாட்டில் நடைபெற்ற மெய்நிகர் இளையர்
மாநாட்டில் திரு டோங் பேசினார்.
மாநாட்டில் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 200 இளையர்கள் பங்கெடுத்தனர்.
1964ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிகழ்ந்த இனக் கலவரத்தில் உயிரிழப்புகள், சேதங்கள் ஆகியவை ஏற்பட்டதை மாநாட்டில் பங்கெடுத்த இளையர்களுடன் அமைச்சர் டோங் பகிர்ந்துகொண்டார்.
கலவரம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் முற்றிலும் மாறிவிட்டதை அவர் சுட்டினார். இன ரீதியாக சிங்கப்பூரில் நடப்பில் உள்ள சில கொள்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்றார் அவர்.
சில நோக்கங்களுக்காக அந்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும் காலத்துக்கு ஏற்ப அது மாற வேண்டும் என்றார் அவர்.