சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக அமைய உள்ள பிரம்மாண்ட நூலகத்தின் கட்டட வடிவமைப்பை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது கருணாநிதியின் பெயரை நினைவுகூரும் வகையில் நூலகத்தின் வடிவமைப்பு அமைய வேண்டும் என்றும் அதற்கேற்ப வடிவமைப்பில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த பிரம்மாண்ட நூலகத்தின் கட்டுமானப் பணிக்கு 70 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் நிதி ஒதுக்க அரசு தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.