மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் அதிக அபாயத்திற்கு ஆளானவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசிகளைப் பெறுவர். மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு இரண்டு தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்ட பிறகு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்படும்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மலேசியாவில் 78.2 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள், முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற முன்னிலை அளிக்கப்படுவர் என்று மலேசியாவின் பிரதமர் சப்ரி இஸ்மாயில் தெரிவித்தார்.
ஆகக் குறைந்த வருமானப் பிரிவினருக்கு புதிதான நிதியுதவித் திட்டம் ஒன்றும் தொடங்கப்படும் என அவர் கூறினார்.