கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் புதிதாக 13,899 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தற்போது மொத்தம் 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
சரவாக் மாநிலத்தில்தான் ஆக அதிகமானோரிடையே கிருமி பரவியிருக்கிறது. அங்கு புதிதாக 2,712 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மலேசியா படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் முயற்சிகளை எடுத்து வருகிறது.