நடிகர் சிம்பு நடித்திருக்கும் 'மாநாடு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அதனால் சிம்பு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம்
முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நாளில் நடிகர் ரஜினிகாந்தின்
'அண்ணாத்த' படமும் வெளியாகஉள்ளதால் ரஜினிகாந்துடன் சிம்பு மோதுவதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாநாடு' திரைப்படத்தை முழு வீச்சில் தயார் செய்து
தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடு செய்தோம். மற்ற நடிகர்களுடன் போட்டி என்று நினைக்காமல் ஒரு விழா நாளில் வெளியிட
வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே தீபாவளிக்கு வெளி
யிடக் காத்திருந்தோம்.
'மாநாடு' படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்னை நம்பி வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கக்கூடாது.
"அதுபோல் திரையரங்க உரிமையாளர்கள் என் பட வெளியீட்டில் லாபம் அடையவேண்டுமே தவிர நட்டமடையக்கூடாது.
"ஒரு சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாகவேண்டும்?
"அதனால் மாநாடு தீபாவளி அன்று வெளியா காமல் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும். 'மாநாடு' தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளி
யேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்," என்று தெரிவித்துள்ளார்.