முதன் முறையாக, சிங்கப்பூரில் ஒளியைக் கொண்டு, ஒற்றைக் கிருமியைப் பிடித்து வேறு இடத்துக்கு மாற்றும் சில்லை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இக்கருவி, வெவ்வேறு அளவுகளில் உள்ள வெவ்வேறு வகைக் கிருமிகளைப் பிடித்து, அவற்றை வேறு இடத்துக்கு மாற்றி, வகைப் படுத்துகிறது.
இந்த சில்லு, 90 முதல் 120 நானோமீட்டர் குறுக்களவு கொண்ட எடெனோவைரஸ் எனும் பொதுவகைக் கிருமிகளில் வேலை செய்கிறது. இந்த வகைக் கிருமிகள், சளி போன்ற அறிகுறிகளை உருவாக்குகின்றன.
எடெனோவைரஸ் கிருமிகள், கொவிட்-19 தொற்றை உண்டாக்கும் சார்ஸ் சிஓவி-2 கிருமியின் அதே அளவில் உள்ளன.
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் இக்கருவியை உருவாக்கியுள்ளனர். சில்லு, இரண்டு செண்டிமீட்டருக்கு இரண்டு செண்டிமீட்டர் அளவிலானது. அதில் 25 சிறு பள்ளங்கள் உள்ளன. ஒளியாற் றலைப் பயன்படுத்தி கிருமி பள்ளங்களில் தள்ளப்படுகிறது.