தேசிய அளவிலான கொவிட்-19 கிருமித்தொற்று விகிதம் அதிகரித்து வருவதன் தொடர்பில் மலேசிய சுகாதாரத் துறை கவலை தெரி வித்துள்ளது. இது தொடர்பாக அந் நாட்டின் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நவம்பர் 7 தொடங்கி நவம்பர் 13 வரை நீடித்த 45வது தொற்றுநோயியல் வாரத்தில் சராசரி கிருமித்தொற்று எண்ணிக்கை, தொற்று மரணங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை குறைந்தபோதிலும் தேசிய அளவிலான தொற்றுப் பரவல் விகிதம் 1.05 ஆக உள்ளது. இது நோய்த்தொற்று அதிகரிப்பதையே உணர்த்துகிறது.
"இந்த விகிதம் 1க்கும் கீழ் இருந்தால் தொற்று குறைந்து வருவதாகப் பொருள்.
"நிலைமை கவலைக்குரியதாகத் தொடர்கிறது. முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில், புதிய தொற்று
களின் எண்ணிக்கையும் தொற்று பரவல் விகிதமும் அதிகரித்துள்ளன.
"சமூக அளவில் தொற்று பரவும் அபாயத்தையும் கிருமித்தொற்றால் மேலும் பலர் பாதிக்கப்படும் நிலையையும் இது உணர்த்துகிறது.
"எனவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. தொற்றுப் பரவலை உடனடியாகக் குறைப் பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்த 45வது வாரத்தில் வேலையிடத் தொற்றுக் குழுமமும் கல்வி நிலையங்களின் தொற்றுக் குழுமமும் அதிகரித்துள்ளன. முந்திய வாரத்தில் அத்தகைய தொற்றுக் குழுமங்கள் குறைவாக இருந்தன.
குறிப்பாக 37வது தொற்று
நோயியல் வாரத்தில் குைறந்திருந்த தொற்றுக் குழுமங்கள், மாநிலங்களுக்கு இடையிலான நடமாட்டம் மீண்ட பிறகும் நான்கு மாநிலங்களில் தேசிய மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பொருளியல் துறை திறக்கப்பட்ட பிறகும் மீண்டும் அதிகரித்துள்ளதாக திரு நூர் ஹிஷாம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.