கோலாலம்பூர்: கடந்த வாரம் நடைபெற்ற மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் அன்வார்தான் தற்போதைய சூழலில் வலுவான எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல தலைவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக. ஜனநாயக செயல் கட்சியின் தேசிய ஏற்பாட்டுச் செயலாளரான அந்தோணி லோக், அன்வார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை பெற்றுள்ளது.
பக்கத்தான் ஹரப்பானின் ஒரே பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராஹிம் என்று குறிப்பிடுவதையும் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
"2018 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்களிடம் நம்பிக்ையை ஏற்படுத்த ஒரே சின்னம் தேவைப்பட்டது. ஒரே பிரதமர் வேட்பாளர் தேவைப்பட்டார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது," என்றார் அவர்.
ஆனால் இதனை மறுத்துள்ள பக்கத்தான் ஹரப்பானின் கூட் டணித் தலைவர்கள் பலர், இப்போதும் அன்வார்தான் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் என்று தெரிவித்தனர்.
மலாக்கா தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையே இனி ஆலோசிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே அன்வாரின் கெஅடிலான் கட்சியின் தொடர்பு இயக்குநரான ஃபாமி ஃபட்ஸில், திரு ேலாவின் கருத்து ஒட்டு ெமாத்த கூட்டணியின் எண்ணத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.