புதுடெல்லி: குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் ஐக்கிய அமீரக சிற்றரசு, சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு தப்பியோடிய 16 இந்தியர்களை ஒப்படைக்குமாறு அவ்விரு நாடுகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்குத் திரும்பிய 16 பேரும் கொலை, மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்காக தேடப்பட்டு வருவதாக அவ்விரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
16 பேர் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அமீரக சிற்றரசுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேடப்படுபவர்களை ஒப்படைக்க வேண்டும்.
இதற்கிடையே, இரு வெவ்வேறு வழக்குகள் தொடர்பாக இந்தியாவுக்குத் திரும்பிய இருவர் மீது சிபிஐ மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ரஜனீஷ் தாஸ் என்பவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றியபோது, பெருந்தொகையை மோசடி செய்ததாக வழக்குப் பதிவாகி உள்ளது.