பண்ருட்டி: கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நடக்க இருந்த திருமணத்தின்போது, மணமகள் உறவினருடன் நடனமாடியதைக் கண்டித்து மணமகன் அறைந்ததால் திருமணம் நின்றுபோனது.
இதைத்ெதாடர்ந்து, மணப்பெண் தனது உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மணமகன் ஸ்ரீதர், 28.
மணப்பெண்ணால் தனக்கு ரூ.7 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக பெண் வீட்டாரிடம் பெற்றுத் தரும்படியும் மணமகன் ஸ்ரீதர் புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
"எனக்கும் ஜெயசந்தியாவிற்கும், 23, கடந்த ஆண்டு நவம்பர் 6ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு நானும் ஜெயசந்தியாவும் கைபேசியில் பேசிப் பழகி வந்தோம். இம்மாதம் 20ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், 19ஆம் தேதி இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சியின்போது, பாடல்களுக்கு ஜெயசந்தியா நடனமாடினார். அவரது கையைப் பிடித்துக்கொண்டு ஒருவர் ஆடினார்.
"ஏன் மற்றவர்களுடன் நடனம் ஆடி இப்படி எல்லாம் நடந்துகொள்கிறாய்,' என ஜெயசந்தியாவிடம் கேட்டேன். 'அப்படித்தான் ஆடுவேன்,' என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் என் குடும்பத்தினர், உறவினர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனது ரூ.7 லட்சத்தை திருப்பித் தரவேண்டும்," என புகார் மனுவில் கூறியுள்ளார்.
திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எனக்கு ரூ.7 லட்சம் செலவாகி உள்ளது. பெண் என்னைத் திருமணம் செய்துெகாள்ளாமல் கைகழுவி விட்டுள்ளார். எனது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. பெண் குடும்பத்தார் எனது செலவுத் தொகையை நஷ்டஈடாகத் திருப்பித் தரவேண்டும்.
மணமகன் ஸ்ரீதர்