இளம் சிங்கப்பூரர்கள் உடல்நலத்துக்கு ஏற்ற பழக்கவழக்கங்களைக் கடைப் பிடிக்க எப்படி ஊக்கமூட்டலாம் என்பதை ஆராய ஒரு சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கூடங்களிலும் வெளியிலும் உடற்பயிற்சிகளில் ஈடுபட இளையர் களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க இருக்கின்றன.
'NutureSG' என்ற அந்தப் பணிக்குழு ஓராண்டு காலம் ஆய்வு செய்து பல பரிந்துரைகளை வெளியிட்- டது. உடற்பயிற்சி, சத்துணவு, மன நலம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பாலர்களிடமிருந்து உயர்கல்வி நிலையங்களில் படிக்கும் மாணக்கர் வரை எல்லாரிடத்திலும் அதிக கவ னம் செலுத்த வேண்டும் என்று அந் தப் பரிந்துரைகள் குறிப்பிடுகின்றன. இதனை ஏற்று பாலர்பள்ளி மேம் பாட்டு முகவை அமைப்பு அன்றாடம் உடற்பயிற்சியில் பாலர்கள் ஈடுபட வேண்டிய நேரத்தை ஒரு மணி நேர மாகக் கூட்டி இருக்கிறது. இப்போது இந்த நேரம் 30 நிமிடம்தான்.
பிடோக் நார்த் ரோட்டில் இருக்கும் பிசிஎஃப் ஸ்பார்க்கில்டாட்ஸ் பாலர்பள்ளியில் பிள்ளைகள் பயிற்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்