துவாஸ் நச்சுக்கழிவு நிர்வாக ஆலையில் நேற்றுக் காலை மூண்ட பெருந்தீ நான்கு மணி நேரத்தில் அணைக்கப்பட்டதாக வும் சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. தீ எழுப்பிய அதிக வெப்ப வெளியேற்றத்தால் தீயணைப் பாளர்களில் ஒருவருக்கு இங் டெங் ஃபோங் பொது மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட் டது. 'எக்கோ ஸ்பெஷல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்' ஆலையில் ரசா யனக் கழிவு, தீப்பற்றக் கூடிய சாதனங்கள் ஆகியவை தொடர் பான இத்தீச்சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வரு வதாகவும் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. 23 துவாஸ் வியூ சர்க்யூட் பகுதியில் அமைந்துள்ள ஆலை யில் காலை நேரத்தில் தீப்பற்றி யதாகவும் அதுகுறித்து 6.15 மணியளவில் குடிமைத் தற் காப்புப் படைக்குத் தகவல் தெரி விக்கப்பட்டதாகவும் கூறப்பட் டது.
தீப்பற்றி எரியும் கழிவு நிர்வாக ஆலை. இதனருகே பணிபுரியும் முகமது டேனியல் என்பவர் காலை 7.04 மணிக்கு எடுத்த படம்.