கோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவுக்கும் வடகொரியா வுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் வடகொரியத் தூதரை வெளியேற்றுவது குறித்து மலேசியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அக்கொலை தொடர்பில் வட கொரியத் தூதர் கூறிய கருத்துக்காக அவரை வெளி யேற்றலாமா அல்லது வட கொரியாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை மூடலாமா என்பது குறித்து மலேசிய அரசாங்கம் பரீசீலித்து வருவதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வடகொரிய நாட்டவரான 46 வயது கிம் ஜோங் நாம் பிப்ரவரி 13ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார். அக்கொலையைத் தொடர்ந்து வடகொரியத் தூதர் காங் சோய் சென்ற வாரம் கருத்து தெரி வித்திருந்தார்.
அக்கொலை தொடர்பாக மலேசியா மேற்கொள்ளும் விசாரணையை வடகொரியா நம்ப முடியாது என்றும் தென் கொரியாவுடன் சேர்ந்து மலேசியா சதி செய்கிறது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.