லதா மங்கேஷ்கர் தமிழில் 1950களில் சில இந்தி படங்கள் மொழிமாற்றம் செய்தபோது அவற்றில் தமிழில் பாடினார்.
அதன் பின்னர் 1980களில்தான் இளையராஜாவின் இசையில் லதா மங்கேஷ்கர் மீண்டும் பாடினார்.
1987ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடல்தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல் என்று கூறப்படுகிறது. .
1988ல் இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை’ என்ற காலத்தை வென்ற பாடலை, காலஞ்சென்ற எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து பாடினார்.
அதே ஆண்டு ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார்.
ஏஆர் ரகுமானின் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
ரகுமான் இசையமைத்த புக்கார், ஸுபைடா, லகான், ரங் தே பசந்தி உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார்.
திருவாட்டியின் லதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ஏஆர் ரகுமான்.
லதா மங்கேஷ்கரும் அவரது சகோதர சகோதரிகளும் தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனைத் தங்கள் மூத்த சகோதரராக எண்ணி உறவாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1960களில் தமது பல பாடல் ஒலிப்பதிவுகள் சென்னையில் இருந்ததாகவும் அப்போதெல்லாம் சிவாஜி கணேசனின் இல்லத்தில்தான் தங்கியதாகவும் அவர் பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.