மணிலா: பிலிப்பீன்சில் தீவிர வாதிகளால் தலை துண்டிக்கப் பட்ட ஜெர்மன் பிணையாளியின் உடல் இவ்வாரம் கண்டுபிடிக்கப் பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் ஜெர்மன் நாட்டவரான ஜர்கன் கன்ட்னெர் கடத்தப்பட்டார். இதன் பின்னணியில் நாங்கள் இருந்தோம் என்று 'அபு சயாஃப்' அமைப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் சுலு தீவி லிருந்து மீட்கப்பட்ட உடல் ஜெர் மனிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித் தனர். நவம்பரில் திரு கன்ட்னெருடன் பாய் மரப் படகில் பயணம் செய்த சாபைன் மெர்ஸ் படகிலேயே கொல்லப்பட்டார்.
ஜர்கன் கன்ட்னெர் அவரது மனைவி சாபைன் மெர்ஸ் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். படம்: ஏஎஃப்பி