தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் தண் ணீர் தட்டுப்பாட்டைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று கல்வி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார். 80 விழுக்காட்டுக்கும் அதிக மான நிலப்பரப்பை மழை நீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தி னாலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்றார் அவர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் தண்ணீரின் விலை கடந்த 51 ஆண்டுகளில் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். தண்ணீர் கட்டணம் அதிகரிக் கப்படுவதால் கடைகளில் விற் கப்படும் உணவு, பானங்களின் விலை உயரும் என்று பொருள் கொள்ளக்கூடாது என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் பங்கேற்றோருடன் உரையாடும் கல்வி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி (இடமிருந்து இரண்டாவது). படம்: திமத்தி டேவிட்